அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் புகைப்படத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசியபோது தமிழ்மொழி, தமிழ் பண்பாடு மற்றும் சமூக நீதி ஆகியவற்றை பாதுகாக்க திமுக தொடர்ந்து போராடி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.