வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கன் அறிவித்தார். மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் தலைமையில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் தங்களது தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகள், வளர்ச்சி தேவைகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, தேர்தல் அறிக்கையை பா.ஜ.க தலைமைக்கு சமர்ப்பிக்க உள்ளன.
தூத்துக்குடி தொகுதி:
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு மாவட்ட தலைவர் டி.சின்னதங்கம், வடக்கு மண்டல் தலைவர் கே.சுதா
திருவைகுண்டம் தொகுதி:
பொருளாதாரப் பிரிவு மாநில செயலாளர் ஜே.சாமிநாதன், சாத்தான்குளம் மண்டல் தலைவர் கே.சரவணன்
திருச்செந்தூர் தொகுதி:
மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.திருநாகரன், மாவட்ட துணை தலைவர் எஸ்.சரஸ்வதி
மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையிலும், தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என மாவட்ட தலைவர் ஆர்.சித்ராங்கன் தெரிவித்தார்