நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டி பகுதியில் உள்ள TNDTA தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் முன்னிலையில், வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய உறுதிமொழி எடுத்துக் கொண்டு அவர், மாணவர்களுக்கு குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். பின்னர் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, விழாவின் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். இதனால் பள்ளி வளாகம் தேசபக்தி உணர்வால் களைகட்டியது.
இந்த விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், மாணவர்களின் கல்வி மற்றும் அனுபவ வளர்ச்சிக்காக விமானப் பயணம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றதோடு, தனது சிறப்பான சேவைக்காக மாநில விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியனும் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தார். குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, மாணவர்களிடையே நாட்டுப்பற்று மற்றும் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.