தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி கக்கன்ஜி நகரில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரை நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்

இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இந்தச் சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு உடனடியாக தெரியப்படுத்தி வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யிடம் நேரடியாக புகார் அளிக்கப்படும் என்று அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.