Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் 155-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் அபிஷேகம் செய்து மரியாதை

Admin 2 hours ago தூத்துக்குடி
வ உ சி - யின் தேசப்பற்று, துணிச்சல் மற்றும் தியாக உணர்வுகளை இளைய தலைமுறையினர் அறிந்து பின்பற்ற வேண்டும்
தூத்துக்குடி, செப்.5:
சுதந்திரப் போராட்ட வீரரும், செக்கிழுத்த செம்மல் என போற்றப்படுபவருமான வ.உ.சிதம்பரத்தின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது முழு திருவுருவச் சிலைக்கு சிறப்பு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசியத் தலைவர் வ.உ.சிதம்பரம் திருமந்திர நகர் – தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு வெள்ளிக் குடத்தில் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிலைக்கு மலர் மாலை அணிவித்து, சிவ முறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரத்தின் சுதந்திரப் போராட்டத் தியாகங்களும், நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய பணிகளும் நினைவுகூரப்பட்டன. அவரது தேசப்பற்று, துணிச்சல் மற்றும் தியாக உணர்வுகளை இளைய தலைமுறையினர் அறிந்து பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா, பி. சிவலிங்கம், இந்து மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் எம். சுடலைமணி சஞ்சய், வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வ.உ.சிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசியத் தலைவர் வ.உ.சிதம்பரம் திருமந்திர நகர் – தமிழ்நாடு அமைப்பின் மாவட்ட தலைவர் ஜி. பாலமுருகன் சிறப்பாக செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் தியாகத்தையும் தேசப்பற்றையும் போற்றினர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

1 hour ago

விவசாயிகளை அடக்குமுறையால் கைது செய்வதை ஏற்க முடியாது: பா.ஜ. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

17 hours ago

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் டிராக்டர், மாட்டு வண்டிகளுடன் போராட்டம் – நூற்றுக்கணக்கானோர் கைது; 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

23 hours ago

கோவில்களில் மொபைல் போன் தடை விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

2 days ago

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கூட்டுறவுத்துறை மேற்பார்வையாளர் இல்லாததால் பொதுமக்கள் சேவை பெறுவதில் தாமதம்

2 days ago

தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்