இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகள் எளிமையாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும். மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்காகவே கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, “மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக” மாறிவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழக அரசு கோவில்களில் மொபைல் போன் தொடர்பான இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும்.
கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும், இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும்; பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக மாறக்கூடாது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.