தூத்துக்குடி கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்னன் பூலித்தேவனின் திருவுருவப் படத்திற்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் மலர் தூவி, மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், அவைத்தலைவர் மற்றும் பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மேலும், மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், மாநகர துணை செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், மாநகர அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள், மாணவரணி நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மன்னன் பூலித்தேவனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர்.