Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

இளம் தலைமுறையினரை பாதுகாக்க அரசியலுக்கு வந்தவர் முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ஸ்ரீநாத்

Admin 11 hours ago தூத்துக்குடி
முதலமைச்சர் விஜயின் சாதனை இந்திய அளவில் தனித்துவமானது. - அமைச்சர் ஸ்ரீநாத்
தூத்துக்குடி, ஆக.23: 

தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் நல்லாட்சி சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வி.வி.டி. சிக்னல் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

சினிமாவில் சாதனை நாயகராக இருந்து வந்த முதலமைச்சர் விஜய், தமிழகம் பல்வேறு வகைகளில் சீரழிந்து செல்வதையும், இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதையும் பார்த்து அமைதியாக இருக்க முடியாமல், அவர்களைப் பாதுகாக்கவும், மக்கள் நலனை காக்கவும் அரசியலுக்கு வந்துள்ளார். இரண்டரை மாதங்களில் மக்களை சந்தித்து தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் விஜயின் சாதனை இந்திய அளவில் தனித்துவமானது.

சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. அதற்கேற்ப என்னை தூத்துக்குடி வேட்பாளராக அறிவித்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அப்போது என்னை அழைத்த முதலமைச்சர் விஜய், “வேட்பாளராக நிற்கிறாய்... ஜெயிக்கிறாய் நண்பா, ஜெயித்து விடு... கப்பு முக்கியம் நண்பா” என்று ஊக்கமளித்தார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மக்களின் இதயங்களில் முதலமைச்சர் விஜய் நிறைந்துள்ளார். செல்போனில் கேம் விளையாடி, ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த இளம் தலைமுறையினரை சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் பார்க்கச் செய்து, அரசியல் மற்றும் நாட்டின் நடப்புகளை அறிந்துகொள்ளும் வகையில் சமூக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

100 நாட்களில் அவர் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக தொடர்வதற்கான வலிமையை அவருக்கு வழங்கியுள்ளது. அவர் வழிவிட்டால் மட்டுமே வேறு எவராலும் அரசியல் களத்தில் முன்னேற முடியும் என்றார்.

நிகழ்ச்சியில் மாநில செய்தித் தொடர்பாளர் முகமது இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்டோர் பேசினர். வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முழுமையான வெற்றியை பெறுவது முக்கியம் என அவர்கள் குறிப்பிட்டனர்.

நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கிஷோர் தலைமை வகித்தார். ஜே.கே.ஆர். முருகன், மாவட்ட இணை செயலாளர் கோல்டன், மாநில துணைப் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், எஸ்.டி.ஆர். விஜய சீலன், வக்கீல் வாரியார், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

உப்பளங்களை பாதுகாக்க கோரிக்கை: தமிழக அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் சந்திப்பு

2 days ago

தூத்துக்குடியில் மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

1 week ago

உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த முள்ளக்காடு மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்; கூட்டத்தில் பரபரப்பு

1 week ago

இந்திய நாட்டின் 80 வது சுதந்திர தின விழா: காந்தி சிலைக்கு எம். சகாயராஜ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை

1 week ago

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை அவமதித்த தீண்டாமை செயலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாட்டம்

1 week ago

மாவட்ட செயலாளராக முதல் முறையாக தூத்துக்குடி வருகை: அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு முதலமைச்சர் விஜய் ஆசியுடன் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன்: அமைச்சர் ஸ்ரீநாத்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்