இந்நிலையில், தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சென்னைக்கு சென்று தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து, உப்பளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “நான் என்ன செய்ய வேண்டும்?” என கேட்டதாகவும், அதற்கு சங்க நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் கலந்து பேசிய பின்னர் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.