Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை அவமதித்த தீண்டாமை செயலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாட்டம்

Admin 58 minutes ago தூத்துக்குடி
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமை வகித்தார். அவர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி, ஆக.15:

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவமதித்ததாக கூறப்படும் உத்தரகாண்ட் மாநில சம்பவத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியாகிரக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமை வகித்தார். அவர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, மேற்கு மண்டல பொறுப்பாளர் ஜான் சாமுவேல், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுடலையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுச் செயலாளர் கோபால், மாவட்ட துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், அந்தோணி ஜெயராஜ், ராஜாராம், மாவட்ட செயலாளர்கள் இக்னேசியஸ், ஏ.டி. தனசேகரன், அந்தோணி குரூஸ் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், எஸ்.சி. துறை பிரபாகரன், மாணவர் காங்கிரஸ் பிளசி, ஆராய்ச்சி பிரிவு ஆடிட்டர் சிவ்ராஜ் மோகன், சிறுபான்மை பிரிவு மைதீன், அமைப்புசாரா பிரிவு சேவியரம்மாள், ஊடகப்பிரிவு ஜெயஜோதி, மாநில பேச்சாளர்கள் அப்துல் மஜித், பார்த்திபன், முன்னாள் மண்டல தலைவர் தங்கராஜ், மகாராஜன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரென்னிஸ்பாபு, முருகன், வசந்த், சதீஷ், மாடக்கண், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இசத்தியம்மாள், சர்க்கரையம்மாள், வனஜா, சரஸ்வதி, கமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னாள் மாமன்ற உறுப்பினர் மாரியப்பன், மில்லை தேவராஜ், செய்யது அலி, கலைப்பிரிவு செயலாளர் மாரியப்பன், வார்டு தலைவர்கள் அகஸ்டின் ஜெபராஜ், காமராஜ், சித்திரை, பால்ராஜ், சேர்மபாண்டி, ரூஸ்வெல்ட், பரமசிவன், தனிஷ்லாஸ் மற்றும் வார்டு நிர்வாகிகள் ஜெயபாண்டியன், செல்வராஜ், பெரியநாயகம், சகாயராஜ், கோபால், ராமசாமி, விசுவாசம் உள்ளிட்ட மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராகவும், தீண்டாமை மற்றும் அவமதிப்பு செயல்களுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்

மாவட்ட செயலாளராக முதல் முறையாக தூத்துக்குடி வருகை: அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு முதலமைச்சர் விஜய் ஆசியுடன் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன்: அமைச்சர் ஸ்ரீநாத்

1 hour ago

தொகுதி மறுவரையறையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் கண்டனப் பேரணி

2 days ago

தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் ஸ்ரீநாத் முதல்முறையாக தூத்துக்குடி வருகை உற்சாக வரவேற்புக்கு நிர்வாகிகள் ஏற்பாடு

2 days ago

புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் - மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூருடன் சந்திப்பு

4 days ago

நான்கு நாள் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி: இரவு பகலாக களத்தில் நின்று சீரான குடிநீர் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி

4 days ago

வெம்பூர் சிப்காட் நில எடுப்பில் முறைகேடு: விசாரணை நடத்தக் கோரி ஆட்சியரிடம் புகார்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்