Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

விவசாயிகளை அடக்குமுறையால் கைது செய்வதை ஏற்க முடியாது: பா.ஜ. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்

Admin 17 hours ago தூத்துக்குடி
வடகால் கடைமடை பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம், செப். 4: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வடகால் கடைமடை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயப் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் முக்கிய வாழ்வாதார கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதாகவும், சிலர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகால் கடைமடை பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். தங்களது வாழ்வாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டிய நிலையில், அவர்களை அடக்குமுறையின் மூலம் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும். பாசனத்திற்கான தண்ணீர் திறப்பதில் ஏதேனும் நடைமுறை அல்லது நிர்வாக சிக்கல்கள் இருந்தால், அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக எடுத்துரைக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கையை புரிந்து கொண்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதே ஜனநாயக நடைமுறையாகும். அதற்கு மாறாக காவல்துறையை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்குவதும், விவசாயிகளை கைது செய்வதும் பிரச்னைக்கு தீர்வாகாது.

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, பாசனத்திற்கான தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரமான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு பா.ஜ. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

1 hour ago

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரத்தின் 155-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் அபிஷேகம் செய்து மரியாதை

2 hours ago

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல் டிராக்டர், மாட்டு வண்டிகளுடன் போராட்டம் – நூற்றுக்கணக்கானோர் கைது; 4 வழிச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

23 hours ago

கோவில்களில் மொபைல் போன் தடை விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

2 days ago

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கூட்டுறவுத்துறை மேற்பார்வையாளர் இல்லாததால் பொதுமக்கள் சேவை பெறுவதில் தாமதம்

2 days ago

தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்