Advertisement

Share On
District News

பாத்திமாநகர் சிலுவையா ஆலயப் பெருவிழா: திருக்கொடியேற்றம் திரளான இறைமக்கள் பங்கேற்பு

Admin 1 day ago தூத்துக்குடி
புதுக்கோட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருட்பணி விஜயன் அடிகளார் தலைமை வகித்து திருக்கொடியேற்றி வைத்தார்
தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடி பாத்திமாநகர் பங்கு சிலுவையா ஆலயப் பெருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை திருக்கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி ஜெபமாலை பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. புதுக்கோட்டை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருட்பணி விஜயன் அடிகளார் தலைமை வகித்து திருக்கொடியேற்றி வைத்தார். இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனைகளில் பங்கேற்றனர்.

தொடர்ந்து, சனிக்கிழமை (12.09.2026) மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனையுடன் பெருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி பிரதீப் அடிகளார் தலைமை வகித்து, மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் வழங்குகிறார்.1789144635_1005290724.jpg

ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) காலை 10 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி வளன் அடிகளார் தலைமை வகிக்கிறார். தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு ஊர் சமபந்தி அசன விருந்து நடைபெறுகிறது.

பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை (14.09.2026) மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும், நன்றித் திருப்பலியும் நடைபெறுகிறது. பாத்திமாநகர் பங்குத்தந்தை அருட்பணி அந்தோணி சார்லஸ் அடிகளார் தலைமை வகிக்கிறார். உதவி பங்குத்தந்தை அருட்பணி ஜெரி அடிகளார் முன்னிலை வகிக்கிறார்.

சிலுவையா ஆலயப் பெருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் OLFTuticorin யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. விழா நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு சிலுவையாரின் ஆசீரைப் பெற்றுச் செல்லுமாறு பாத்திமாநகர் ஊர் நலக் கமிட்டி, சிலுவையா கோவில் நிர்வாகக் குழுவினர், பங்கு இறைமக்கள் மற்றும் திருஇருதய அருட்சகோதரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடியில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முதல்வர் ஜோசப் விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு – மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசாதே என முழக்கம்

21 hours ago

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நிர்வாக சீரமைப்பு, ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசனை – அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சால் பரபரப்பு

3 days ago

முள்ளக்காட்டில் கருப்புக்கொடி போராட்டம் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் போராட்டம்

6 days ago

வ.உ.சிதம்பரனார் 155-வது பிறந்தநாள்: தமிழ்நாடு வ.உ.சி.பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1 week ago

ரீல்ஸ் அரசியலை விட்டுவிட்டு ரியாலிட்டி அரசியலுக்கு வாருங்கள்” பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு அலட்சியம் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்

1 week ago

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் 1,800 ஏக்கர் நில எடுப்பை நிறுத்துக; 25 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுக! உப்பளத் தொழிலை பாதுகாக்க வேண்டும்: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் – மத்திய மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான ஏ.எஸ். லாரன்ஸ் வலியுறுத்தல்

1 month ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்