Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை: அதிகாரத்தை பயன்படுத்தி திமுக குரலை ஒடுக்க முடியாது – கனிமொழி

Admin 1 day ago தூத்துக்குடி
சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள், புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என, தவெக அரசின் நடவடிக்கைகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். - கனிமொழி கருணாநிதி
தூத்துக்குடி, செப்.17:

சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ள நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கனிமொழி கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்தில், “சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள், புதிய தலைமைச் செயலகத்திற்காக பட்டினப்பாக்கம் மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி என, தவெக அரசின் நடவடிக்கைகளை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

மேலும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நிலையும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், வழக்கம்போல மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதாலும், அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதாலும் திமுகவின் குரலை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது என்றும், மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து முன்னெடுத்து குரல் கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சென்னை மற்றும் திருச்சி இல்லங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செப்டம்பர் 16-ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளிகளுக்கான அனுமதி தொடர்பான ரூ.100 கோடி மோசடி புகார் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

த லீடர் இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக கரு. நாகராஜன் நியமனம் அண்ணாமலை அறிவிப்பு

28 minutes ago

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் விழா தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் விமரிசையாக கொண்டாட்டம்

2 hours ago

தூத்துக்குடியில் பரபரப்பு சட்டவிரோத மது விற்பனை குறித்து புகார்: காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல் வாலிபரை போலீசார் வலைவீசி தேடல் – காங்கிரஸ் கட்சியினர் கண்டனம்

1 day ago

பள்ளி மாணவர்களுக்கு கட்சித் துண்டா? மாணவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்

3 days ago

புதிய பேருந்து நிலையம் ஸ்ரீ போத்தி விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்ட அன்னதானத்தை கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்

4 days ago

கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட வேண்டும் உப்பள தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விசிக ஆதரவு: திருமாவளவன் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்

4 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்