Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கட்சித் துண்டா? மாணவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்துவது கண்டிக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்

Admin 1 hour ago தூத்துக்குடி
பள்ளி மாணவர்களுக்கு த.வெ.க. கட்சித் துண்டை அணிவித்து, அவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்தியிருப்பது அப்பட்டமான அரசியல் அத்துமீறலாகும் - கீதா ஜீவன்
தூத்துக்குடி, செப்.14:

பள்ளி மாணவர்களின் பிஞ்சு மனங்களில் அரசியல் கட்சி அடையாளங்களைத் திணிக்கும் வகையில், அவர்களுக்கு த.வெ.க. கட்சித் துண்டை அணிவித்திருப்பது வெட்கக்கேடானதும், மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும் என முன்னாள் அமைச்சர் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவர்களுக்கு த.வெ.க. கட்சித் துண்டை அணிவித்து, அவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்தியிருப்பது அப்பட்டமான அரசியல் அத்துமீறலாகும். இந்தச் சம்பவத்தில் பங்கேற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர், மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் எதிர்காலத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மாறாக, பள்ளி மாணவர்களை அரசியல் அடையாளங்களுடன் நிறுத்துவதும், அவர்களின் தோளில் கட்சித் துண்டை அணிவிப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பள்ளி மாணவர்களை அரசியல் களத்தில் பயன்படுத்துவதும், அவர்களை கட்சி சார்ந்த நிகழ்வுகளின் அடையாளங்களாகக் காட்டுவதும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். மாணவர்களின் பிஞ்சு மனங்களில் அரசியல் கட்சி அடையாளங்களைத் திணிக்கும் இதுபோன்ற செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறையின் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மதிக்காமல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலனே முதன்மையானதாக இருக்க வேண்டும்.

“மாணவர்களை தங்களது #ReelsModel அரசின் விளம்பரத்திற்கான கருவிகளாகப் பயன்படுத்துவதை அமைச்சர் உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை அரசியல் சுயநலத்துக்காக பயன்படுத்தும் இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறக்கூடாது” என கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

புதிய பேருந்து நிலையம் ஸ்ரீ போத்தி விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்ட அன்னதானத்தை கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்

10 hours ago

கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட வேண்டும் உப்பள தொழிலாளர்களின் போராட்டத்துக்கு விசிக ஆதரவு: திருமாவளவன் முதலமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்

15 hours ago

விழிப்புணர்வுடன் வாக்களிக்க மக்களுக்கு அரசியல், பொருளாதாரப் புரிதல் அவசியம்: அண்ணாமலை

1 day ago

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

1 day ago

தூத்துக்குடியில் பரபரப்பு, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் காரை அடித்து நொறுக்கிய கும்பல்

2 days ago

பாத்திமாநகர் சிலுவையா ஆலயப் பெருவிழா: திருக்கொடியேற்றம் திரளான இறைமக்கள் பங்கேற்பு

3 days ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்