"மாறுவோம்... மாற்றுவோம்... போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என்ற முழக்கத்துடன், வீ த லீடர் இயக்கத்தின் முதல் மாநில மாநாடு, இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை Ex. ஐபிஎஸ் தலைமையில் வருகிற ஜூலை 12-ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என வீ த லீடர் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி குமரி சத்தியசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், ஜூலை 12-ஆம் தேதி காலை 8 மணிக்கு தூத்துக்குடி புதூர்–பாண்டியாபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இருந்து மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து வாகனங்களும் ஒன்றிணைந்து பொள்ளாச்சிக்கு புறப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, வீ த லீடர் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் பெருவாரியாக கலந்து கொண்டு, "மாறுவோம்... மாற்றுவோம்... போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என்ற இலக்கை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லவும், இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை Ex. ஐபிஎஸ் கரத்தை வலுப்படுத்தவும் ஒன்றிணைவோம் என உமரி சத்தியசீலன் தனது அறிக்கையின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.