தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை - ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில், லண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற சமூக நீதிப் போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனாரின் 167-வது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி போல்டன்புரத்தில் நடைபெற்றது.
போல்டன்புரத்தில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் உருவச் சிலைக்கு தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவனத் தலைவர் புலி. செ. இளவரச பாண்டியன், பேரவை நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவு அறக்கட்டளைத் தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் மாடசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பிரசாத் முன்னிலை வகித்தார்.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்கறிஞர் அர்ஜுன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலச் செயலாளர் விஜி பாண்டியன், ஆட்டோ கணேசன், தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் கண்ணன், முத்துலட்சுமி, கார்த்திக் முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர்.
முடிவில், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பு நன்றியுரை ஆற்றினார்.