இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில், தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து, இன்னாசியார்புரத்தில் உள்ள அன்பு சிறார் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர், பிரையண்ட் நகரில் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவ, மாணவியர் பள்ளியில் இரவு உணவு வழங்கப்பட்டதுடன், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், மீனவர் காங்கிரஸ் துறைச் செயலாளர் சிமியோன், மகிளா காங்கிரஸ் தலைவி ப்ரீத்தி வினோத், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பர்ணபாஸ், எஸ்.சி. துறை நிர்வாகி ஏ.டி. பிரபாகரன், மாநில பேச்சாளர் பார்த்திபன், தென்மண்டல ஊடகப் பிரிவு தலைவர் ஜான் சாமுவேல், மாவட்ட பொதுச் செயலாளர் கோபால், மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், ரஞ்சிதம் ஜெபராஜ், சேவியரம்மாள், மாவட்ட துணைத் தலைவர் ராஜாராம் மற்றும் இளைஞர், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: தூத்துக்குடியில் உள்ள காது கேளாதோர் மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களின் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்குகிறார். உடன் காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.