Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

அமைச்சர் பதவி விலகக் கோரி தூத்துக்குடியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்: 125 பேர் கைது

Admin 11 hours ago தூத்துக்குடி
தமிழக அமைச்சர் சரத்குமார் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பழைய காணொளி அண்மையில் சர்ச்சை
தூத்துக்குடி, ஜூன் 29:

தமிழக அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி, தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழக அமைச்சர் சரத்குமார் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான பழைய காணொளி அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் விளக்கம் அளித்திருந்தாலும், அதுவும் விவாதத்திற்கு உள்ளான நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். எனினும், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கீதா ஜீவன் மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அறிவிப்பின்படி, டூவிபுரம் 5-வது தெருவில் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் யூனியன் கவுன்சிலர் இரா. அந்தோணி தனுஷ்பாலன் உள்ளிட்ட ஆண், பெண் மாணவரணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அமைச்சர் பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தூத்துக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுனில் தலைமையில், ஆய்வாளர் வேல்ராஜ் உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சுமார் 125 பேரை கைது செய்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

அப்போது போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்

முதல்வர் விஜய் கட்சி தொடங்கிய உடனே முதல்வராகவில்லை; வி த லீடர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறி தீவிரமாக செயல்படும் உள்ளாட்சித் தேர்தலுக்கு உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும் என கரு நாகராஜன் வலியுறுத்தல்

2 days ago

கோவில்பட்டியில் இருந்து கப்பிகுளம் கிராமத்திற்கு புதிய பேருந்து இயக்கம்: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

2 days ago

தூத்துக்குடியில் நாளை அண்ணாமலையின் "வி த லீடர்" இயக்க மாவட்ட நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதிய அறிவிப்புகளை கரு நாகராஜன் வெளியிடுகிறார் டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதி மறுப்பால் பரபரப்பு

4 days ago

முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா: முத்தையாபுரம் பல்க் திடலில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

1 week ago

ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்

1 week ago

அரசுப் பள்ளிகளில் அரசியல் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்: வீ த லீடர் அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்