தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா டீ கடையில் தொடங்கி, கே.டி.சி. நகர், எஸ்.எம்.டி. ஹவுசிங் போர்டு, கொத்தனார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு ஆதரவாக கவுன்சிலரும் மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான ரெங்கசாமி தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த பிரசாரத்தில் தொமுச முன்னாள் செயலாளர் எஸ்.இடிசி முத்துராஜ், முன்னாள் தலைவர் பால்ராஜ் முன்னிலையில் செல்வராஜ், பாலு, டேவிட் ராஜ், சேவியர், ஜெகதீசன், கலை இலக்கிய அணி முருகேசன், ரத்தினவேல், கோபால், ராஜாமணி, சுப்புராஜ், வீரப்பன், ராஜேஷ், சங்கர் நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர் அணியினர் உற்சாகமாக களமிறங்கி, திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் விளக்கினர். கட்டணமில்லா விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எடுத்துக்கூறப்பட்டன.
மேலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு வரும் 23ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மகளிரணி நிர்வாகிகள் அமுதா, சுகுமாரி, இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன், திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளும் பொதுமக்களிடம் விளக்கப்பட்டன.
ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு, 3வது வார்டு முழுவதும் அரசியல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.