தூத்துக்குடி போல்டன்புரத்தில் அமைந்துள்ள திவான் பகதூர் பெண்ணுரிமைக் காவலர் இரட்டைமலை சீனிவாசனார் திருவுருவச் சிலைக்கு, அவரது 81-வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை மற்றும் ஆதித்தமிழர் புரட்சி கழகம் சார்பில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிறுவனர் தலைவர் புலி.செ. இளவரசபாண்டியன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் இரட்டைமலை சீனிவாசனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சமூகப் பணிகள் மற்றும் உரிமைப் போராட்டங்களை நினைவுகூரும் வகையில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் இரட்டைமலை சீனிவாசனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி செயலாளர் மாரிச்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் வழக்கறிஞர் அர்ஜுன், முன்னாள் மண்டல செயலாளர் முரசு தமிழப்பன், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் விக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், த.அன்பு, உதயா, மாடசாமி, கருப்பசாமி, செல்வம், விக்டர், வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுக முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இயக்கத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அனைவரும் இரட்டைமலை சீனிவாசனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது சமூகப் பணிகளையும் உரிமைப் போராட்டங்களையும் நினைவுகூர்ந்தனர்.