Advertisement

Share On
மாவட்ட முக்கிய செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு

Admin 1 day ago தூத்துக்குடி
சமத்துவ மக்கள் கழகம் – நாடார் பேரவை தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் ஏ. நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெருந்தலைவர் காமராஜர் 124-வது பிறந்தநாள்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி, ஜூலை 19:

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் – நாடார் பேரவை சார்பில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 1000 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாவட்ட அளவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா, ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி மணி நகர் 4-வது தெருவில் உள்ள ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் பி.எம். அற்புதராஜ் (மாலைசூடி) தலைமை வகித்தார். மாநில தொழிற்சங்கச் செயலாளர் எஸ். ஜெபராஜ் டேவிட், மாநில துணைப் பொதுச் செயலாளர் ரெ. காமராசு நாடார், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் ஏ. அந்தோணிபிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் (நாடார் பேரவை – தெற்கு) எஸ்.என்.பி. அருண் சுரேஷ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சமத்துவ மக்கள் கழகம் – நாடார் பேரவை தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எர்ணாவூர் ஏ. நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1000 ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், கல்வி உதவித்தொகைகள், முதியோருக்கான உதவிப் பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கல்வி ஊக்கத்தொகைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களின் சாதனையை பாராட்டிய நிர்வாகிகள், கல்வியே சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் என்றும், காமராஜர் காட்டிய கல்விப் பாதையை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

விழாவில் மாநில பொதுச்செயலாளர் சூலூர் டி.ஆர். சந்திரசேகர், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், மாநில பொருளாளர் வழக்கறிஞர் எம். கண்ணன், மாநில தலைமை நிலைய செயலாளர் எஸ். தங்கமுத்து, மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் டி. விநாயகமூர்த்தி, மாநில துணைத்தலைவர் நிப்பான் டி. தனுஷ்கோடி, மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.ஏ.எஸ்.ஆர். பிரபு, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் எம். விஸ்வநாதன், மாவட்ட தலைவர் (நாடார் பேரவை – வடக்கு) உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், மாவட்ட நிர்வாகிகள் சார்பில் அனைத்து விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாவட்ட தலைவர் (நாடார் பேரவை – வடக்கு) எம். பரமசிவன் நன்றியுரை வழங்கினார்.

மேலும் செய்திகள்

நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்: தூத்துக்குடியில் டாக்டர் செல்லக்குமார் பேட்டி

1 hour ago

தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் அனைவருக்கும் கல்வி உரிமை, சமத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி மினி மாரத்தான்: 1,887 பேர் பங்கேற்பு

1 hour ago

தூத்துக்குடியில் உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி உப்பு உற்பத்தியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம்: உப்பு உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை

3 days ago

ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும்: அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை

4 days ago

கரூர் இனாம் நில விவகாரம்: ரயத்வாரி பட்டா பெற்ற விவசாயிகளின் உரிமையை உறுதி செய்யும் நடவடிக்கையை வரவேற்கிறோம் – வீ த லீடர் தலைவர் அண்ணாமலை

1 week ago

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடு சந்தேகம்: விளக்கவுரைத் தேர்வை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் – வீ த லீடர் இயக்கத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்