நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரைஸ் மில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி சார்பில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ள ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் மு. அனுசியா (முதுகலை வணிகவியல், கல்வியியல்) பொறுப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து அடுத்த கட்ட தேர்தல் நகர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டம் தொடக்கத்தில் உறுதிமொழி ஏற்று, மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா.மு. தமிழ்நேயன், சு. அன்னலட்சுமி ஆகியோர் தலைமையிலும், மண்டல செயலாளர் இ. மாரிமுத்து முன்னிலையிலும் கூட்டம் நடைபெற்றது. மாநில பாசறை பொறுப்பாளர்கள் அந்தோணி பிச்சை, செ. பரதேசி, துரைசிங் செந்தில்குமார் உள்ளிட்டோர் அடுத்த கட்ட தேர்தல் பணிகள் குறித்து கருத்துகளை பகிர்ந்தனர்.
மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், செல்லப்பா முருகன், சேரந்தை ராஜ், மாடசாமி, சுடலைமணி, சிவகுமார், முத்துக்குமார், கொலஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை முன்வைத்தனர்.
மாவட்டச் செயலாளர் தேவராஜ் நன்றியுரை நிகழ்த்த, கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.