தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு, எட்டையபுரம் சாலை மெயின் ரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி 3 வது வார்டு கவுன்சிலர் மாநகராட்சி கணக்குக்குழு தலைவரும், தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான, ரெங்கசாமி தலைமை தலைமையில். ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன் முன்னிலையில் பிரம்மாண்ட கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 500 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கி பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் இளைஞரணி துணை அமைப்பாளர் பால் துரை, கேடிசி செல்வராஜ், இபி செல்வராஜ், சேவியர், வினோத், ராஜேஷ் உள்ளிட்டோர் மற்றும் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம். பிலோமின் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மூன்றாவது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி சிறப்பாக செய்திருந்தார்.