மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு நாம் இந்தியர் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் என் பி ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் இந்தியர் கட்சி சார்பில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம், தி.மு.க.வை அரசியல் ரீதியாக எதிர்ப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தவெக செயல்படுகிறது என்றார்.
தமிழகத்தில் விலைவாசி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தேவையற்றது. மின்சார உற்பத்தியை அதிகரிக்க சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட பல்வேறு மாற்று வழிகள் உள்ளன. எனவே, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்சாரத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் ராஜா பெரியசாமி வலியுறுத்தினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், நாம் இந்தியர் கட்சியும் தனது அரசியல் நிலைப்பாடுகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது நிர்வாகிகள் பொன்ராஜ், ஜெய்கணேஷ் மற்றும் பலர் இருந்தனர்.