Advertisement

Share On
District News

அ ம மு க மற்றும் மாற்று கட்சியில் இருந்து விலகி 300 மேற்பட்டோர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

Admin 4 months ago தூத்துக்குடி
300-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இருந்த மாணிக்கராஜா, கட்சி விரோத செயல்கள் காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பின்படி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதன் தொடர்ச்சியாக, இன்று தூத்துக்குடி தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணிக்கராஜா முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்களும் மற்றும் மாற்றுக் கட்சி சேர்ந்தவர்களும் 300-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்.

புதியதாக இணைந்தவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து அமைச்சர் கீதா ஜீவன் உற்சாகமாக வரவேற்றார். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்