தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி 3வது தெரு சந்திப்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று உரையாற்றினார். மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகி ஏ.பி.சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன்,
தொடர்ந்து அமைச்சர் பேசியபோது, கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசு கல்வி, தொழில் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார். “நான் முதல்வன்” போன்ற திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் கூறினார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், வியாபாரிகள் சுதந்திரமாக தொழில் செய்யும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முந்தைய ஆட்சியில் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரசு அறிவித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார். விவசாயம், கல்வி, மருத்துவம், இளைஞர் தொழில் தொடக்கம் மற்றும் பெண்கள் சுயநிறைவு ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் விளக்கினார்.
இறுதியாக, மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டுமெனில் மீண்டும் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணியை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் அழைப்பு விடுத்தார்.

கூட்டத்தில் காங்கிரஸ், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.