தூத்துக்குடி, ஏப்.1 –
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சி.த. செல்லப்பாண்டியன் அவரை ஆதரித்து தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் 3ம் மைல், அண்ணா நகர் பகுதிகளில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகையில் செல்லப்பாண்டியன், திமுகவில் பெரும்பாலும் குடும்ப ஆட்சியை நடைபெறுகிறது வாரிசு அரசியல் நடைபெறுகிறது அங்கே மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் கீதா ஜீவன் ஜெகன் பெரியசாமி என்ற குடும்ப ஆட்சியை நடைபெறுகிறது எனவும் திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டினார். மதுபான கடைகளில் கூடுதல் விலை வசூல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்றும், நகரில் பூங்காக்களின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கூறினார்.
தூத்துக்குடியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இதை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மழை, வெள்ள காலங்களில் தாம் மக்களுடன் இருந்து உதவி செய்ததாகவும், அப்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து நிலைமையை ஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் தேர்தலில் அதிமுக பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள், உள்ளூர் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.