தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் வகுப்பறைக்கு அடிக்கல் நாட்டி விலையில்லா மிதிவண்டிகளை சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தருவைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறையின் மூலம் 1.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 6 கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதனைத் தமிழ்நாடு அரசின் மூலம் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை 106 மாணவ மாணவிகளுக்கு சண்முகையா எம்எல்ஏ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர் ஆனந்த் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அரவிந்த் வருவாய் ஆய்வாளர் வாசுகி கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆன்றோ ரூபன் பங்குத்தந்தை அருட்திரு.வின்சென்ட் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி கொடியன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் கிளை செயலாளர்கள் ராபின் ஞானப்பிரகாசம் தயாளன் பிரஸ்நேவ் மகளிரணி அன்னம்மாள் பாக்கியலட்சுமி மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.