தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா துவக்கி வைக்கும் விழா - மற்றும் பொங்கல் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா - அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என்று வட்ட செயலாளர் மூக்கையா மற்றும் கவுன்சிலர் வைதேகி ஆகியோர் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் இன்று அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு கருதி புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை துவக்கி வைக்கும் விழா மற்றும் பொங்கல் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராவை துவக்கி வைத்து பொங்கல் திருநாள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டி.கே.எஸ். ரமேஷ், வட்டச் செயலாளர்கள் முக்கையா, நவநீதன், வட்ட அவைத் தலைவர் பெரியசாமி, மாமன்ற உறுப்பினர்கள் வைதேகி, சரவணக்குமார், சுப்புலட்சுமி, பகுதி பிரதிநிதி கோபால், திமுக தகவல் தொழில்நுட்ப அணி சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, வட்டத் துணைச் செயலாளர் வெங்கடாசலம், வட்ட பிரதிநிதிகள் பாபு, அய்யாதுரை, ரஜினி முருகன், குமார், முத்து, சிம்பு சிவா மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.