தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 

பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கணினி பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கடந்த மாதத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கணினிபட்டா கோரி மனு அளிப்பதற்கு ஏதுவாக முகாம் ஒன்று அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த முகாமில் 3000 க்கு மேலான மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு கூடிய விரைவில் படிப்படியாக கணினி பட்டா வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று (12.03.2025) முதல் கட்டமாக 151 பயனாளிகளுக்கு தமிழக அரசின் உத்தரவின் பேரில் கணினி பட்டா வழங்குவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன், கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்களை வழங்கி வர கூடிய சில தினங்களில் மேலும் 144 பயனாளிகளுக்கு கணினி பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் சரவணகுமார், பொன்னப்பன், அதிஷ்ட மணி, ராஜதுரை, ஜான் சீனிவாசன், மாற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.