11லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையத்தினை எம்எல்ஏ மார்க்கண்டேயன் திறந்து வைத்தார்.

T.சண்முகபுரம் கிராமத்தில் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 11-லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
மேலும் சுரைக்காய்பட்டி ஊராட்சி, குளத்துவாய் பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 7-லட்சம் மதிப்பில் கலையரங்கம் அமைக்கும் பணிக்கு எம்எல்ஏ மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன்,கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசகன்,சுப்புலட்சுமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல்,மகேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிளைச் செயலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.