எட்டயபுரத்தில் மார்ச் 12ல் கடம்பூர் ராஜு தலைமையில் மனித சங்கிலி போராட்டம் : அதிமுக அறிவிப்பு!

எட்டயபுரத்தில் மார்ச் 12ல் கடம்பூர் ராஜு தலைமையில் மனித சங்கிலி போராட்டம் : அதிமுக அறிவிப்பு!

போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எட்டயபுரத்தில் மார்ச் 12ல் அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு மாலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் விடியா தி.மு.க அரசு பதவியேற்ற மூன்றாண்டுகளில் தமிழகம் போதைப்பொருட்களின் கேந்திரமாக மாறி இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்திட எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்திற்கு பகுதிகளுக்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, மாநகரபகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட, நகராட்சி, பேரூராட்சி வார்டு, மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் மற்றும் பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்