அமமுக வில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகல் - தூத்துக்குடியில் பரபரப்பு!...

தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தாங்கள் விலகி கொள்வதாக அறிவித்தனர்.
தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மத்திய மாவட்ட மாநகர செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர் ஆலோசனையின் பேரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி மாநகர பகுதியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பகுதி செயலாளர்கள், மற்றும் வட்ட செயலாளர்கள் அனைவரும் பிரைட்டரின் ஆலோசனைக்கிணங்க தங்களை அமமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய நிர்வாகிகள்;
பகுதி செயலாளர்கள் திரேஸ்புரம் பகுதி ஜான் பெர்னான்டோ, முத்தையா புரம் பகுதி மதன் குமார், சண்முக புரம் பகுதி முத்து செல்வம், வார்டு செயலாளர்கள் அய்யப்பன், முத்துச் சாமி, பவுல் ராஜ், மோச்சையா, டில்டன், ஹெரிங்டன், ஜெனிபர், வின்சென்ட், ரவின்டோ, முத்தையா புரம் பகுதி மாரிசெல்வம, செல்வக் குமார், முகமது ஹசன், மணிகண்டன், அணிச் செயலாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தாமஸ் ஜோவர், மகளிரணி செயலாளர் முத்து மணி, மாணவரணி செயலாளர் பிரபாகரன், இளம் பெண்கள் பாசறை அன்னலெட்சுமி, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மத்திய மாவட்ட மாநகர செயலாளர் பதிவி வகித்த வழக்கறிஞர் பிரைட்டர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர், மற்றும் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து அக்கட்சியில் இருந்த விலகியதும், விரைவில் விஜய் கட்சியின் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.