தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் இருக்காது எந்த தேதியில் தெரியுமா...

தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 20. 11. 2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என ஆணையர் மதுபாலன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.