திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சிங்கப்பூர் ஆகியநாடுகளில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு முதலீடு செய்ய சென்றுள்ளார் -எஸ்.பி. சண்முகநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு!.

திமுக அரசின்  முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சிங்கப்பூர் ஆகியநாடுகளில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு முதலீடு செய்ய சென்றுள்ளார் -எஸ்.பி. சண்முகநாதன் பரபரப்பு குற்றச்சாட்டு!.

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் எஸ் பி சண்முகநாதன் பேசுவையில் தமிழகத்தில் மதுபானங்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலைகள் அனைத்தும் திமுக அமைச்சர்களிடம் தான் உள்ளது அமைச்சர்கள் தான் சாராய தொழிற்சாலை நடத்துகிறார்கள் தவிர மற்றவர்கள் யாரும் நடத்தவில்லை செந்தில் பாலாஜி பற்றி அனைவருக்கும் தெரியும் உங்களுக்கு பேர் போனவர் தான் செந்தில் பாலாஜி 

தமிழகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருப்பவர் செந்தில் பாலாஜி என ஸ்டாலின் தான் இதே செந்தில் பாலாஜி பற்றி பேசினார் அதே செந்தில் பாலாஜிக்கு இன்று சாராயம் விற்கும் வேலையை செய்து கொண்டுள்ளார். 

தற்போது தமிழகத்தில் ஒரு கோமாளித்தனமான ஆட்சி நடைபெற்று வருகிறது சாராயம் விற்றவனுக்கும் ஊக்கத்தொகை கொடுத்தவருக்கும் ஊக்கத்தொகை திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என கூறினார் ஆனால் தற்போது கஞ்சா கலாச்சாராயம் என தமிழகத்தில் ஆறாக ஓடுகிறது.

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் ஸ்டாலின் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக திமுக அமைச்சரவையில் உள்ள நிதியமைச்சரே தெரிவித்திருந்தார்.

தற்போது திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் சிங்கப்பூர் ஆகியநாடுகளில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு முதலீடு செய்ய சென்றுள்ளார் தவிர முதலீடுகளை ஈர்க்க செல்லவில்லை என்ன குற்றம் சாட்டினார்