கலைஞர் நூற்றாண்டு விழா - கனிமொழி எம்பி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி - சண்முகையா எம்எல்ஏ கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி
பிறந்தநாளை முன்னிட்டு புதியம்புத்தூர் லவ்லி கிரிக்கெட் கிளப் நடத்திய 5 ம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இன்று நடைபெற்ற இறுதி போட்டியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாப்பிள்ளையூரணி மாதா நகர் அணியினருக்கு ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் பரிசுத்தொகை ரூ 20000/- வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன்,ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன்,நகர செயலாளர் லிங்கராஜ்,மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் ராஜா ஸ்டாலின், துணை அமைப்பாளர் ஞானதுரை, வர்த்தகர் அணி முத்துக்குமார்,மாணவரணி தங்கதுரை,பாண்டியன், மருத்துவர் அணி தங்கவேல்சாமி, நெசவாளர் அணி ஈசன் சுரேஷ்,ஆதிதிராவிடர் அணிமாடசாமி,கருப்பசாமி,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார்,ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காமராஜ்,ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி,ஒட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான இளையராஜா, இளைஞரணி ஜெகன்,பார்த்திபன்,கிளை செயலாளர்கள் இளங்கோ,சிவமுருகன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.