அனைத்து வியாபாரிகளின் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா - மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!.

தூத்துக்குடி, பிப்.24 புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 15வது ஆண்டு விழா, புதிய சங்கங்களில் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா புதுக்கோட்டை ஆர்.சி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச்செயலாளரும், புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவருமான பீட்டர் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சர்க்கரை, பி.என்.பெரியசாமி, செயலாளர்கள் கே.பெரியசாமி, முருகன் ஆகியோர் வரவேற்றனர். பொருளாளர் ராபின்சன் ஆண்டறிக்கை வாசித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மண்டலத்தலைவர் ராதாகிருஷணன், கன்னியாகுமரி மண்டலத்தலைவர் வைகுண்டராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, தெற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். முன்னதாக, முப்பெரும் விழாவிற்காக புதுக்கோட்டை வந்த ஏ.எம்.விக்கிரமராஜாவிற்கு புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புதிதாக இணைந்த கூட்டாம்புளி மற்றும் மறவன்மடம் சங்கங்களில் மற்றும் புதுக்கோட்டையில் இரண்டு இடங்களில் பேரமைப்பின் கொடியை ஏ.எம்.விக்கிரமராஜா ஏற்றி வைத்தார். தொடர்ந்து புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறையை திறந்து வைத்தார். தொடர்ந்து வியாபாரிகள் சார்பில் புதுகோட்டையில் அமைக்கப்பட்டுள்ள 7 சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்தார். முன்னதாக புதுக்கோட்டை பஜார் பகுதியில் காவலர்கள் அமர்வதற்காக புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடையை தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுதிர் திறந்து வைத்தார்.
விழாவில், திருநெல்வேலி அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் இசக்கிமுத்தையாவின் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சக்தி வணிகர்கள் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. சடகோபன் நம்பி குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது. நிறைவாக விழாவில் கலந்து கொண்ட வியாபாரிகள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் முருகன் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் வெற்றி ராஜன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கண்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், தெற்கு மாவட்ட பொருளாளர் அருணாசலம், வடக்கு மாவட்ட பொருளாளர் ஆனந்த் பொன்ராஜ், கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜம், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பட்டு, கோவில்பட்டி செயலாளர் ரவி மாணிக்கம், திருச்செந்தூர் தலைவர் பாரதி சுரேஷ், எட்டையபுரம் துணைத்தலைவர் ராஜா, செய்தி தொடர்பாளர் அம்புரோஸ், புதுக்கோட்டை அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க இணைச்செயலாளர் சக்திவேல் முருகன், கருங்குளம் துணை சேர்மன் லட்சுமணன், வெலபனான் லேண்ட் பிரமோட்டர்ஸ் சாமுவேல், புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகநயினார், சித்த மருத்துவர் முருகேசன், ரத்னா ஏஜென்சிஸ் வினோத் தர்மராஜ், தூத்துக்குடி மாவட்ட மருந்து விற்பனைச் சங்க தலைவர் முனியசாமி, கிரேஸ் கன்ஸ்ட்ரக்சன் பாஸ்கர், மறவன் மடம் வியாபாரிகள் சங்க தலைவர் காசி, கூட்டாம்புளி வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயராஜ், பொதுநல சேவகர் ரவிதாகூர், ஜெயவிலாஸ் உரிமையாளர் ஜெயச்சந்திரன், முத்து சிதறல் சத்யா, முத்து விநாயகர் டிரான்ஸ்போர்ட் சன்னாசி, பிரையண்ட் நகர் வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் சுகன்யா செந்தில்குமார், திருச்செந்தூர் ரோடு வியாபாரிகள் சங்க செயலாளர் மகேஷ்வரன்சிங், வர்த்தகரெட்டிபட்டி கூட்டுறவு வங்கி தலைவர் முத்துசாமி(எ) ராஜா, மறவன்மடம் வியாபாரிகள் சங்க கோயில்ராஜ், இளைஞரணி அமைப்பாளர்கள் டேவிட்குமரன், சக்திலிங்கம், முத்துக்குமரன், துணைச்செயலாளர்கள் வியாகப்பன், லெனின், கணேசன், ராஜன், கருப்பசாமி, சந்திரசேகரன், இணைச்செயலாளர்கள் ராபின்சன் குருசோ, சுடலை முருகன், ஆதி நாராயணன், பாரத், சரவணன், இளைஞரணி பொறுப்பாளர்கள் பொன்முருகன், முத்துக்குமார், சங்கர் நாராயணன், ராஜன், சிங்கராயர், செல்லப்பா, சரவணன், கௌரவ ஆலோசகர்கள் செந்தில் ஆறுமுகம், ராமச்சந்திரன், வேலாயுதம், அருள்ராஜ், சக்திக்குமார், முத்துக்குமார், சங்கர்(எ)அம்பி, சட்ட ஆலோசகர்கள் பிள்ளை விநாயகம், நாராயணன், பாலமுருகன், செயற்குமு உறுப்பினர்கள் சுப்பையா, சுப்பிரமணியன், ஜெயராஜ், ஐயப்பன், பாலமுருகன், மகாராஜன், லட்சுமணகுமார், சதீஸ், முத்துக்கிருஷ்ணன், சுப்பிரமணியன், சந்தனக்குமார், கணேசன், முருகன், அருண்குமார், குமரேசன், அகமது இஸ்மாயில், பூராஜா, ராஜகுமார், பரமசிவன், பாலமோகன், முத்துராமன், ஜெபின் சாமுவேல், ஜேக்கப்செல்வராஜ், செல்லையா, முத்துராமன், பொன்துரை, கருப்பசாமி, மனோகர்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.