தூத்துக்குடியில் 22 ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி!.

தூத்துக்குடியில் 22 ஆயர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நேற்று மாலையில் நடைபெற்றது தமிழக திருச்சபை ஆன்மீக வளர்ச்சி சமூக வளர்ச்சி குறித்து திட்டமிடுவதற்காக தமிழ்நாடு புதுச்சேரி கத்தோலிக்க ஆயர் பேரவை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம் இந்த ஆண்டு தூத்துக்குடி மதுரை மாவட்டம் தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆயர் பேரவை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஆயர் இல்லத்தில் தொடங்கியது இதனை முன்னிட்டு தூத்துக்குடி தெரு இருதயங்களில் பேராலய வளாகத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
திருப்பலிக்கு சென்னை மயிலாப்பூர் ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் ஆயர்கள் தாமஸ் அக்குவினாஸ், கோவை ராயப்பன், சேலம் தேவதாஸ் அம்ப்ரோஸ், தஞ்சை அந்தோணிசாமி, கும்பகோணம் ஸ்டீபன் அந்தோணி, தூத்துக்குடி அந்தோணிசாமி, பாளையங்கோட்டை நசரன், கோட்டாறு உள்ளிட்ட 22 மறை மாவட்டங்களை சேர்ந்த ஆயர்கள் பங்கேற்று திருப்பலி நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து வியாழக்கிழமை இன்று ஆயர்பேரவை கூட்டம் நடக்கிறது.